டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒளிப்பதிவாளர் ஜெயபால் கந்தசாமி இயக்குனராகியிருக்கும் படம் யாத்ரீகன். "இது 10 வயது முதல் 45 வயது வரையிலான ஒரு மனிதனின் பயணக்கதை. கதையின் நாயகன் ஆதி (கிஷோர்). சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்கு செல்ல நேர்கிறது. பூட்டிய அறைக்குள் அமர்ந்து அவன் இந்த உலகத்திற்கு பல கேள்விகளை கேட்கிறான். அதற்கான பதில்களை தேடி அலைவதுதான் படத்தின் கதை. அவன் சந்திக்கும் மனிதர்கள், அவனை பாதிக்கும் நிகழ்வுகள் இவை அவனை என்னவாக்குகிறது என்பது திரைக்கதை.
நேபாளம், காங்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வராணாசி, காலிம்பன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. புத்த பூர்ணிமா அன்று புத்த பிட்சுகள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலத்தை படமாக்கி இருக்கிறோம். படத்தின் முக்கிய இடத்தில் இந்த ஊர்வலம் இடம் பெறும். கிஷோரின் சினிமா கேரியரில் இது அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ஜெயபால் கந்தசாமி.
வி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரங்கராஜ் இசை அமைக்கிறார், சாயாசிங், சுனுலட்சுமி, சரண் உள்பட பலர் நடிக்கிறார்கள். நாக் ஸ்டூடியோ சார்பில் சோமசேகர ரெட்டி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. வாழ்க்கையின் பல நிலைகளை கடந்து செல்லும் கிஷோர் கடைசியில் புத்த பிட்சு ஆவது மாதிரியான கதை என்கிறார்கள்.