சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நான் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் தீவிரமான ரசிகன். ரஜினியின் ரசிகராக இருப்பதால்தானோ என்னவோ, இப்போதைய எல்லா நடிகர்களையுமே எனக்கு பிடிக்கும் என்கிறார் காமெடி நடிகர் பாலசரவணன்.
கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் என்ற தொடரில் அறிமுகமான அவர், பின்னர் கனா காணும் காலங்கள் என்ற விஜய் டிவியின் மெகா தொடரில் நடித்தார். அதைத்தொடர்ந்து, சசிகுமார் நடித்த குட்டிப்புலி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் பாலசரவணன். முதல் படத்திலேயே ஷோலோ காமெடியனாக நடித்த அவர், அதன்பிறகு ஈகோ, பண்ணையாரும் பத்மினியும், என்றென்றும், நெருங்கிவா முத்தமிடாதே, திருடன் போலீஸ், ஆஹா, டார்லிங் என பல படங்களில் நடித்தார். இப்படி நடித்த எல்லா படங்களிலும் படம் முழுக்க ஹீரோக்களுடன் வரும் ஷோலோ காமெடியனாகத்தான் நடித்திருந்தார் பாலசரவணன்.
அதையடுத்து இப்போதும் கூட்டத்தில் ஒருவன், கோ-2, தண்ணி வண்டி, ஒருநாள்கூத்து, ராஜாமந்திரி, உள்குத்து, புருஸ்லீ, அஜீத்தின் 56வது படம் என பத்து படங்கள் வரை பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படங்களில் தனது கேரக்டர்கள் பற்றி பாலசரவணன் கூறுகையில், நான் நடிக்கிற அனைத்து படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில்தான் நடிக்கிறேன். சில படங்களில் நகைச்சுவையாக நடித்தபோதும் குணச்சித்திரமும் கலந்து நடிக்கிறேன். அதோடு, நான் நடிக்கிற வேடங்கள் கதைக்கு பெரிய சப்போர்ட்டிவ் ரோல்களாகவும் உள்ளன. மேலும், கோ-2, உள்குத்து, ஒருநாள் கூத்து, புருஸ்லீ போன்ற படங்களில் பாடல் காட்சிகளிலும் ஹீரோக்களுடன் இணைந்து நடனமாடுகிறேன். முக்கியமாக ஹீரோக்களுக்கு இணையான ரோல் பண்றேன் என்கிறார்.
அவரிடத்தில், உங்களுக்கான காமெடி டயலாக்கை எழுத காமெடி இலாகா வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டால், அந்த மாதிரி அதிகபிரசிங்கிதனமான வேலைகளில் நான் ஈடுபடுவதில்லை. காரணம், ஒரு கதையை 6 மாதங்களுக்கு மேலாக யோசித்து எழுதுகிறார்கள் டைரக்டர்கள். வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்களை விடவா நான் பெரிதாக யோசித்து விடப்போகிறேன். அந்த வகையில் நான் நடிக்கிற படங்களில் டைரக்டர்கள் தரும் காமெடி டிராக்கும், அதற்கான வசனங்களும் நன்றாகவே உள்ளன. அதனால் அதை கெடுக்க விரும்பாமல், அவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியேதான் நான் நடித்து வருகிறேன். என்னைப்பொறுத்தவரை காமெடிக்கென்று டீம் வைத்து டைரக்டர்களையும் குழப்பி, நாமும் குழம்பாமல் அவர்கள் சொல்வதைக்கேட்டு அப்படியே நடித்தாலே மிகச்சிறப்பான காமெடி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும், நான் சிறு வயதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிரமான ரசிகன். அதனால்தானோ என்னவோ இப்போது இருக்கிற அனைத்து நடிகர்களையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எல்லா ஹீரோக்களின் படங்களிலும் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் பாலசரவணன்.