‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் திருமுருகன். அதையடுத்து சினிமா ஆசை ஏற்பட எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களை இயக்கினார். அதில் எம்டன் மகன் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னர், முன்னணி ஹீரோக்களின் கால்சீட் கிடைக்கவில்லை. அதனால் மறுபடியும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார்.
நாதஸ்வரம் தொடரை இயக்கியவர் இப்போது குலதெய்வம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது நாதஸ்வரம் சீரியலின் பெரும்பகுதி படப்பிடிப்பை காரைக்குடியிலேயே நடத்திய திருமுருகன், இப்போது குலதெய்வம் சீரியல் படப்பிடிப்புக்காகவும் அடிக்கடி காரைக்குடி சென்று விடுகிறார்.
இதுபற்றி அவரைக் கேட்டபோது, அதற்கு முக்கிய காரணம், பெரும்பாலான சீரியல்கள் சென்னையிலேயே படமாக்கப்படுகிறது. அதுவும் ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்ட வீடுகளிலேயே திரும்பத்திரும்ப நடக்கிறது. இதனால் சீரியல்களை பார்க்கும்போதே இது அந்த சீரியல் படமாக்கப்பட்ட வீடு என்பதை ஆடியன்ஸ் சொல்லி விடுகிறார்கள்.
அப்படி ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் படமாக்குவதால், ஒரேவிதமான மனநிலையுடனேயே ஆடியன்ஸ் சீரியல் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால்தான் எனது நாதஸ்வரம் தொடரை முழுக்க முழுக்க காரைக்குடியிலேயே லொகேசன் பார்த்து படப்பிடிப்பு நடத்தினேன் என்கிறார். மேலும், தற்போது குலதெய்வம் சீரியலுக்காகவும் அவ்வப்போது காரைக்குடி செல்கிறேன். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. எனது சொந்த ஊர் காரைக்குடி என்பதோடு, அங்கு குறைந்த தொகையில் லொகேசன் கிடைக்கிறது. அதோடு தங்களது ஊர்காரர் என்பதால் படப்பிடிப்பு நடத்த நல்ல ஒத்துழைப்பும் தருகிறார்கள். அதனால்தான் சமீபகாலமாக காரைக்குடி லொகேசனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன் என்கிறார் திருமுருகன்.