விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சிவகார்த்திகேயன்-விஜயசேதுபதி இருவருமே சமகாலத்து நடிகர்கள்தான். தனுஷ்-சிம்பு இருவரும் போட்டியாளர்களாக இருந்த பிறகு அடுத்த போட்டியாளர்கள் இல்லாத நிலைதான் இருந்து வந்தது. அப்போதுதான் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வளர்ந்து வந்தனர். அதனால் மேற்படி நடிகர்கள் இருவரும்தான் அடுத்த போட்டியாளர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கிடையே போட்டி ஏற்படவில்லை.
ஆனபோதும், விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படம் வெளியானபோது, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படமும் வெளியானது. அதோடு இரண்டு படங்களுமே வெற்றிபெற்றது. அதில் ஒருவர் வெற்றி பெற்று, இன்னொருவர் தோல்வியடைந்திருந்தால் அவர்களுக்கிடையே போட்டி மனிநிலையை உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அதற்கான சூழல் அப்போது ஏற்படவில்லை.
இந்த நிலையில், தற்போது தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் இணைந்து விஜயசேதுபதி நடித்துள்ள நானும் ரெளடிதான் படம் அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. அதேநாளில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படமும் வருவதால், பரபரப்பை கூட்டும் முயற்சியாக அவர்களை போட்டியாளர்களாக சித்தரித்து சமூக வலைதளங்களில் செய்தி பரப்பிவிடும் வேலைகளை தொடங்கப்பட்டுள்ளது