சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டைரக்டர் மணிரத்னம் இயக்கவிருக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படம் குறித்த கதை விவாதத்தில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்று வருகிறார். மணிரத்னம் தன்னுடன் பணியாற்றவோ, கதை விவாதம் செய்யவோ புத்திசாலிகளை மட்டுமே வைத்துக் கொள்வார். தனக்கு சரியென படும் சில விஷயங்கள் தன்னுடன் கதை விவாதத்தில் பங்கேற்கும் புத்திசாலி நண்பர்களுக்கு சரியாக படுகிறதா? என்பதை நேரடியாகவே கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார். இப்போது அவர் தனது அடுத்த படமான பொன்னியின் செல்வன் படம் குறித்த கதை விவாதத்தில் மும்முரமாக இருக்கிறார்.
வரலாற்றுப் படமான இந்த படம் குறித்த கதை விவாதத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்கனவே பங்கேற்றுள்ளார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் இந்த வாதத்தில் பங்கேற்று வருகிறார். படத்தில் பயன்படுத்திக் கொள்ள பிரஞ்ச் தேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குதிரைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம். ஏற்கனவே கமல்ஹாசன் தனது மருதநாயகம் படத்திற்காக அங்கிருந்துதான் குதிரைகளை இறக்குமதி செய்தாராம். அதுபற்றிதான் கமலிடம் கருத்து கேட்டிருக்கிறார் மணி. அனுபவசாலி கமல்ஹாசனும் தன் பங்குக்கு சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறாராம். ராவணன் போல இல்லாமல் இருந்தால் சரிதான்!