ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சித்தார்த்தை மணிரத்னத்தின் உதவி இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக, சினிமா ஆர்வலராகத் தெரியும். ஆனால் அவர் சபையில் சினிமா பற்றி விரிவுரை நிகழ்த்தும் விரிவுரையாளராக நேற்று தான் தெரிந்தது. கொல்லபுடி சீனிவாஸ் அறக்கட்டளையின் தேசிய விருது வழங்கும் விழாவில் சித்தார்த் இன்றைய சினிமாவின் போக்குகள், நம்பிக்கைகள், வாய்ப்புகள் பற்றியெல்லாம் விரிவுரை நிகழ்த்தினார். தங்குதடையின்றி சரளமாக பேசினார். சிரஞ்சீவி, சுஹாசினி உள்பட பலரும் வியந்து ரசித்தனர்.
அவர் பேசிக் கொண்டே வந்த போது... சினிமா இயக்குநரை ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒப்பிட்டார். மனைவி ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக வலியால் துடிக்கும் போது கையைப் பிசைந்து கொண்டு தவித்தபடி நிற்கும் கணவனுடன் தயாரிப்பாளரை ஒப்பிட்டார்.
பிரசவம் நிகழும் போது அறைக்கு வெளியே ஆவலுடன் கூடியுள்ள உறவினரைப் போன்றவர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்றார். விநியோகதர்களை டாக்டர்கள் போன்றவர்கள் என்றார். இந்த உதாரணங்கனை அனைவரும் ரசித்தனர். விரிவுரையாற்றியதற்கு 25 ஆயிரம் சன்மானமும் பெற்றார். இனி சித்தார்த் இப்படி விரிவுரையும் ஆற்றலாம். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது சித்தார்த்துக்குப் பொருந்தும்.