டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தைப் பொருத்தவரை அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு அத்தனை சீக்கிரம் வராது. ஆனால் அவரது ஒவ்வொரு அசைவும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அவற்றில் எது உண்மை.. எது பொய்... என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போவார்கள். தன் படத்தைப் பற்றி உண்மைக்கு மாறான செய்திகள் வெளிவரும்போது மணிரத்னம் மறுப்பும் சொல்ல மாட்டார். அவர் வாய் திறக்காதவரை இதுபோன்ற செய்திகளும் வந்து கொண்டே இருக்கும். ஓ காதல் கண்மணி படத்தை மணிரத்னம் இயக்க உள்ள புதுப்படம் குறித்தும் இப்படித்தான் தினம் ஒரு செய்திகள் அடிபடுகின்றன. லேட்டஸ்ட்டாக மணிரத்னத்தின் படத்துக்கு யார் ஒளிப்பதிவாளர் என்பது பற்றிய செய்தி அடிபட ஆரம்பித்திருக்கிறது. அதாவது, தசாவதாரம், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவி வர்மன்தான் மணிரத்னம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாராம். ரவி வர்மன் ஒளிப்பதிவாளர் என்பதால் மணிரத்னத்தின் படத்திற்கு நிச்சயமாக சமந்தா கதாநாயகியாக இருக்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.