பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாய்ஸ் படத்திலிருந்தே சாக்லேட்பாய் இமேஜில் சிக்கித்தவித்து வந்த சித்தார்த், அதிலிருந்து தன்னை மீட்டு ஆக்சன் ஹீரோவாக்க வேண்டும் என்றுதான் ஜிகர்தண்டாவில் இறங்கினார். ஆனால் அந்த படமோ ஹீரோ சித்தார்த்தை ஓரம்தள்ளிவிட்டு, வில்லன் பாபி சிம்ஹாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து விட்டது. இருப்பினும் அதையடுத்து காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் படங்கள் மீது நம்பிக்கை வைத்தார் சித்தார்த். அந்த நம்பிக்கையும் தகர்ந்து விட்டது. அதனால், இப்போது எந்தவித பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சுந்தர்.சியின் அரண்மனை-2 வில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு தன்னை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால், அவரிடம் கதையை துருவி துருவி கேட்காமல், இந்த படத்தில் தனது ரோல் முந்தைய படத்தில் நடித்த வினய் போன்றுதான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டே நடித்துக்கொண்டிருக்கிறார் சித்தார்த்.