'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2013-ல் செந்தூரப்பூவே ராம்கி ரீ-என்ட்ரி ஆன படம் மாசாணி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாகை சூடவா இனியா நடித்திருந்தார். பத்மராஜ்-எல்ஜிஆர் இணைந்து இயக்கியிருந்த அந்த படத்தில் ரோஜா, ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர்.மேலும், திரில்லர் கதையில் உருவான அப்படத்தில் இனியாதான் லீடு ரோலில் நடித்தார். ஆனால் படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் அந்த படத்தில் ஆரம்பித்த சறுக்கல் இனியாவை தொடர்ந்ததால் இப்போதுவரை அவரால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை.
இந்தநிலையில், அந்த மாசாணி படத்தை இயக்கிய பத்மராஜ்-எல்ஜிஆர் இருவரும் இணைந்து அடுத்தபடியாக காந்தாரி என்றொரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தும் கதை என்பதால், தங்களது முதல் படமான மாசாணியில் நடித்த இனியாவையே நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். ஆனால் ஒருவேளை மாசாணியை மனதில் வைத்துக்கொண்டு இனியா நடிக்க மறுத்தால், வேறு நடிகையிடம் கால்சீட் கேட்கும் முடிவில் இருக்கிறார்களாம்.