தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருடன் போலீஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும், இயக்குனர் கார்த்திக் ராஜுவும் இணைந்து வழங்கும் படம் உள்குத்து. அட்டகத்தி படத்திற்கு பிறகு தினேஷூம், நந்திதாவும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நாகர்கோவிலில் துவங்கியது. மீனவர்களின் வாழ்வியலை பற்றி விவரிக்கும் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இந்தக் கதைக்கு நாகர்கோவில் தான் சிறந்த கதைக் களமாகும். என படத்தின் பெரும்பாலான காட்சிகளை நாகர்கோவிலேயே நடத்த உள்ளனர்.
ஒருபக்கம் அரேபிய கடல் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலை தொடர் என்று நாகர்கோவில் ஒரு அழகிய நகரமாகும். அந்த நகரத்தின் கலாச்சாரமும், அந்த நகரத்து மக்களின் வாழ்வியலும் மிகவும் சுவராசியமானது. நான் பார்த்த என் கண்கள் கவர்ந்த அந்த நகரத்தின் அழகை ரசிகர்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசை படுகிறேன் என்று கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.