ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமுத்திரகனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்தவர் வெங்கட்பிரபு. அதன்பிறகும் சில படங்களில் நடித்தவர், நடிப்பு ஒர்க்அவுட் ஆகாததால் சென்னை 28 படத்தை விளையாட்டாக எடுத்தார். ஆனால் விளையாட்டை மையமாக வைத்து எடுத்த அந்த படம் சூப்பர் ஹிட்டாகியதால், பின்னர் சீரியசாகவே இயக்குனராகி விட்டார். அதையடுத்து, சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கியவர், யாருமே எதிர்பார்க்காத வகையில் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற படத்தை இயக்கி மெகா டைரக்டரானார்.
ஆனால் அதற்கடுத்து அவர் இயக்கிய பிரியாணி, மாஸ் என்ற இரண்டு படங்களுமே ப்ளாப் ஆகிவிட்டது. அதனால் அடுத்து எந்தமாதிரி கதையை யாரை வைத்து இயக்குவது என்பதில் குழம்பிப்போயிருக்கிறார் வெங்கட்பிரபு. இந்தநிலையில், தனது தம்பி பிரேம்ஜிக்காக யார் கதை சொல்ல வந்தாலும், வெங்கட்பிரபுதான் அந்த டைரக்டர்களை துருவி துலாவுகிறாராம். குறிப்பாக, புதுமுக டைரக்டர்களாக இருந்தால், என் தம்பி நடிப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால், சில காட்சிகளை டெஸ்ட் ஷூட் பண்ணிக்காட்டுங்கள் என்கிறாராம்.