தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நீதானே என் பொன் வசந்தம், யான் உட்பட ஜீவா நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் பட வாய்ப்பு இல்லாமல் சில காலம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். புதுப்பட வாய்ப்புகள் தேடி வராதநிலையில் திருநாள் படத்தை தானே தயாரிக்கும் முடிவுக்கு வந்தார். திருநாள் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, ஜீவாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். வரிசையாக புதுப்படங்கள் தேடி ஆரம்பித்துவிட்டன.
ஆர்யாவை வைத்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கி உள்ள ராஜேஷ் அடுத்து இயக்கும் படத்தில் ஜீவாதான் ஹீரோ. ராஜேஷ் இயக்கிய முதல் படமான சிவா மனசுல சக்தி படத்தை தொடர்ந்து ஜீவாவும், ராஜேஷும் இணையும் படம் இது. தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் வெளியீட்டு வேலை மற்றும் புரமேடாஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் ராஜேஷ்.
ஜீவாவுக்காக ஏற்கெனவே ஒரு ஒன் லைன் ஸ்டோரியை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். எனவே டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருக்கும் ராஜேஷ், VSOP படம் வெளியானதும் ஜீவாவை வைத்து இயக்கவிருக்கும் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை துவங்க திட்டமிட்டிருக்கிறாரம்!
ஜீவா தற்போது கவலை வேண்டாம், திருநாள் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுடன் ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் ஜீவா. மற்றும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய இயக்குநரின் படத்திலும் நடிக்க இருக்கிறார்.