தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில நாட்களுக்கு முன்பு, 'பிரேமம்' படத்தை பற்றியும், அது கிளப்பிவிட்ட வீடியோ பைரஸி பிரச்சனை பற்றியும் தனக்கு தோன்றிய கருத்துக்களை சொல்லி சர்ச்சையை கிளப்பியிருந்தார் பிரபல மலையாள இயக்குனரான கமல். தற்போது மம்முட்டியை வைத்து 'உடோபியாயிலே ராஜாவு' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்தப்படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருக்கும் கமல் மீண்டும் பிரேமம் பற்றி இன்னொரு விளக்கத்தையும் கூறியுள்ளார்..
அதாவது 'பிரேமம்' படத்தை பற்றி தான் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன என்றும், வீடியோ பைரஸி என்பது பலகாலமாக இருந்துவரும் சூழலில் இந்த ஒரு படத்தை மட்டும் மீடியாவும், போலீசாரும் உயர்த்தி பிடிப்பது ஏன் என்றுதான், தான் கேட்டதாகவும் கோபப்படுகிறார் கமல். அதுமட்டுமல்ல, ஒரு மாணவன், ஆசிரியையை காதலிப்பதாக தவறான பாதையை காட்டும் படத்தை கண்டித்து கருத்துச்சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்றும் கொந்தளிக்கிறார்.