பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மணிரத்னம் படத்தில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை படத்தில் நடித்துள்ள நடிகர்களால் கூடத் தெரிந்து கொள்ள முடியாது. படம் முடிந்து திரைக்கு வரும் போதுதான் யார் படத்தில் நாயகன், யார் நாயகி என்பது தெரிய வரும். கடல் படத்தில் கூட சூப்பர் ஹிட் பாடலான நெஞ்சுக்குள்ளே..உம்மை முடிஞ்சிருக்கேன்.. பாடலைக் கூட முதலில் படத்தின் மற்றொரு ஜோடியான அர்ஜுன் - லட்சுமி மஞ்சுவுக்காகத்தான் படமாக்கியிருந்தார் என்றார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அதை அப்படியே படத்தின் இளம் காதல் ஜோடிகளான கௌதம் கார்த்திக் - துளசி ஆகியோருக்கு மாற்றி விட்டார் என்றார்கள். கடைசி நிமிடம் வரை மணிரத்னம் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இப்போது மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் புதிய படத்தில் துல்கர் சல்மான், கார்த்தி ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என்றார்கள். அடுத்து கார்த்தி, மம்முட்டி ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என்றார்கள். இப்போது மீண்டும் துல்கரும், கார்த்தியும்தான் நடிப்பார்கள் என்கிறார்கள். அதே போல படத்தின் நாயகிகளாக நயன்தாரா, ஸ்ருதிஹாசன், நித்யா மேனன் என பல பெயர்களைச் சொன்னார்கள். இப்போது அந்த இடத்தை கீர்த்தி சுரேஷ் பிடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு நாயகி, மற்றொரு நாயகியைத் தேடும் படலம் ஆரம்பமாகியுள்ளது என்கிறார்கள்.
யார் நடித்தாலும் சரி, முதல் வரியில் சொல்லப்பட்டிருப்பதைப் போலத்தான் நடக்கப் போகிறது...அதனால், படம் வெளிவரும் வரை பொறுத்திருப்போம்.