பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சர்ச்சைகளில் சிக்கி, அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பெண் சாமியார் ராதே மா, விரைவில் பாலிவுட்டிலும் சினிமா ஆக வர இருக்கிறார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மாவுக்கு, 50; நாடு முழுவதும் தீவிர பக்தர்கள் உள்ளனர். 23ம் வயதில் சாமியார் ஆன இவர், பக்தர்களை கட்டிப்பிடித்து, முத்தம் தந்து ஆசி அளிப்பார். மறைந்த பிரமோத் மகாஜனின் மகன், ராகுல் மகாஜன், டுவிட்டர் பக்கத்தில், சமீபத்தில், ராதே மா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மினி ஸ்கர்ட் உடையில், சோபாவில், தொடைகள் தெரியும் படியும், தலையில் சிவப்புத் தொப்பி அணிந்து, சினிமா நடிகை போன்று ஸ்டைலாக நின்றபடியும், ராதே மா, போஸ் தந்திருந்தார். இந்நிலையில், ராதே மா மீது, மும்பையைச் சேர்ந்த, 32 வயது பெண் வழக்கறிஞர் பல்குனி பிரம்பட் காவல் நிலையத்தில், நேற்று, வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். பல்குனி பிரம்பட் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:
மதத்தின் பெயரால், ராதே மா, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார். அருவருக்கத்தக்க, ஆபாசங்களை அவர், பக்தர்களிடையே அரங்கேற்றி வருகிறார். அவரது பக்தர்களான, என் மாமனார், மாமியார் மூலம், என்னிடம் வரதட்சணை கேட்டு தொல்லை தரும்படி, ராதே மா தூண்டி விட்டுள்ளார். வரதட்சணை தராவிட்டால், அடித்து உதைக்குமாறும் கூறிஉள்ளார். ராதே மா, என்னை நேருக்கு நேர், கண்டபடி அசிங்கமாக திட்டியுள்ளார்.
ராதே மா தூண்டுதலால், மனதளவிலும், உடல் அளவிலும், தாங்க முடியாத அளவு துன்பம் அனுபவித்து வருகிறேன். இவ்வாறு, பல்குனி பிரம்பட் கூறியுள்ளார். இதையடுத்து, புகார் தந்த பெண்ணின் மாமனார், மாமியார், கணவர் உட்பட ஏழு பேருக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, அரை குறை ஆடையுடன், போஸ் தந்து, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராதே மா மீது, வரதட்சணை கொடுமை புகார் வந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.