'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வந்தவர் செல்வராகவன். இருப்பினும் தற்போது சிம்பு நடிக்கும் கான் படம் மூலம் எழுந்து நிற்க முயற்சிக்கிறார். அதனால் இந்த படத்திற்காக பல கதைகளை யோசித்து இறுதியாக ஒரு ஆக்சன் கதையை ஓகே செய்து படப்பிடிப்பைத் தொடங்கினார்.
சிம்புவுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, டாப்சி, கேத்ரின் தெரசா என பலரை படத்தில் நடிக்க வைத்தார். தற்போது சிம்பு, கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்திலும் நடிப்பதால், அவர் கால்சீட் தரும்போது தனது படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார். அதோடு எப்போதும் போலவே இந்த படத்தின் கதையையும் சீக்ரெட்டாக வைத்திருந்தார் செல்வராகவன்.
அதோடு, அவர் வெளியிட்ட சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்கூட அவரை நெற்றியில் பட்டை தீட்டப்பட்ட ஒரு பக்திமான் போலதான் காண்பித்திருந்தார். இதனால் கான் படத்தின் கதையை யூகிக்க முடியாமல் இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் பேசிய ஜெகபதிபாபு, கான் படத்தில் தான் ஒரு குடிகார ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாக சொன்னார்.
அவரைத் தொடர்ந்து இப்போது டாப்சி, கான் படத்தில் உளவுத்துறைஅதிகாரியாக தான் நடிப்பதாக ஒரு பேட்டியில் உளறிக்கொட்டி விட்டார். இதனால் ஏற்கனவே ஜெகபதிபாபு கதையை ஓப்பன் பண்ணிவிட்டதால் விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் இருந்து வந்த செல்வராகவன், டாப்சியும் இப்போது தனது கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லி படத்தின் கதையை அவுட் பண்ணியதால் அவருக்கு போன் போட்டு தனது கோபத்தை காண்பித்து விட்டாராம். அதோடு, அப்படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்களையும் அழைத்து இருக்கிற மிச்ச கதையையாவது சீக்ரெட்டாக வைத்திருங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளாராம் செல்வா.