டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள ஸ்ரீமந்துடு படம் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் சாதனை செய்து வருகின்றது. இதனால் ஸ்ரீமந்துடு படக்குழுவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற சமூக கருத்தை வலியுறுத்தும் இப்படத்தை அரசியல் பிரமுகர்களுக்கு திரையிட படக்குழுவினர் விரும்புகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்தரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாய்டு ஆகியோருக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்ட திட்டமிடப்படுள்ளது. மேலும் தெலுங்கானாவைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தெலுங்கானா முதல் சந்திரசேகர ராவின் மகனுமான கே தரக ராமா ராவ் ஸ்ரீமந்துடு படத்தை பார்க்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இப்படத்தை பார்ப்பார் என தெரிகிறது. இவர்கள் பார்த்த பின்னர் இந்திய பிரதமர் மோடிக்கு இப்படத்தை திரையிட்டு காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி அறிவுறுத்திய கிராமங்களை தத்தெடுக்கும் சமூக கருத்தை வலியுறுத்தும் படம் என்பதால் மோடிக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்ட படக்குழுவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.