'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தமிழில் நந்திதா நடித்ததில் அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என நான்கு படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. ஆனால் ஓரிரு ஹிட் படங்களில் நடித்த நடிகைகளே அதையடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி வரும் நிலையில், நந்திதாவுக்கு மட்டும் அது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
அதனால், விஜயசேதுபதி, விஷ்ணு என்று நடித்து வந்தவர், இப்போது காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக உப்புக்கருவாடு படத்தில் நடிக்கிறார். இதனால் இப்படியே தனது மார்க்கெட் மெல்ல மெல்ல சரிந்து விடுமோ என்று அவர் பயந்து கொண்டிருந்த நேரத்தில்தான் விஜய்யின் புலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனால், என்ன கேரக்டர், எத்தனை நாள் கால்சீட், என்ன சம்பளம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், எப்போது படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று மட்டுமே கேட்ட நந்திதா, அவர்கள் சொன்ன நாளில் புலி ஸ்பாட்டுக்கு ஓடோடிச்சென்றார். போன் பிறகுதான் ஒரு பாடல் காட்சியில் சித்திரக்குள்ளனாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சித்திரக்குள்ளியாக நடிக்க வேண்டும் என்கிற தகவல் தெரிந்திருக்கிறது.
ஆனபோதும், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு மெகா நடிகைகள் இருக்கும் படத்தில் தன்னை ஏதேனும் சிறிய கேரக்டர்களுக்காகத்தான் அழைத்திருப்பார்கள் என்று நினைத்து சென்ற நந்திதா, விஜய்யுடனேயே நடிக்க வேண்டும் என்ற மகிழ்ச்சியே போதுமானதாக இருக்க, சில நாட்கள் மட்டுமே நடித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
அதோடு, தான் நடித்த காட்சிகளை இதுவரை அவர் பார்க்கவில்லையாம். அதனால் விஜய் ரசிகர்கள் எப்படி புலியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்களோ அதேபோன்று இப்போது நந்திதாவும் புலியின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்.