விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
'செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்...' என திரையுலகத்தில் அனைவருமே பாட ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு செப்டம்பர் மாதத்தில் சில முக்கிய படங்கள் திரைக்கு வர உள்ளன. முக்கியமாக விஜய் நடித்துள்ள 'புலி' படம் திரைக்கு வருவதால் அந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பே அதிகமிருக்கிறது. இது வழக்கமான விஜய் படம் போல மசாலா படமாக இல்லாமல் ஒரு ஃபேன்டஸி படமாக இருப்பதே அதற்குக் காரணம். மேலும் படத்தில் உள்ள மிகப் பெரும் நட்சத்திரங்களும் மற்றொரு காரணமாக இருக்கிறார்கள்.
'புலி' படத்திற்கு முன்னதாக விஷால் நடித்துள்ள 'பாயும் புலி' படம் வெளிவர உள்ளது. சுசீந்திரன் - விஷால் இதற்கு முன் கூட்டணி சேர்ந்த 'பாண்டிய நாடு' படம் மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இந்தப் படத்தையும் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் நிறையவே எதிர்பார்க்கிறார்களாம். சுசீந்திரன் படங்களில் ஒரு தெளிவான திரைக்கதை அம்சமும், அருமையான குடும்பத்துப் பின்னணியும் படத்தில் இருப்பது அனைத்து ரசிகர்களையும் கவரும் என நினைக்கிறார்கள். அது இந்தப் படத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை அதிகமாகவே எழுந்துள்ளது.
இந்த இரண்டு படங்களின் போட்டியைச் சமாளிக்கும் விதத்தில் வேறு சில படங்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை 'சவாலே சமாளி' படத்தைத் தவிர வேறு யாரும் செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிடப் போவதாக அறிவிக்காமலே இருக்கிறார்கள்.
படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதில் தற்போது அனைவருமே தயக்கத்தைக் காட்டுகிறார்கள். இந்த வாரம் வருவதாகச் சொல்லப்படும் 'வாலு' படத்தைக் கூட மிக மிக விரைவில் என்றுதான் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கே இப்படி என்றால் மற்ற சிறிய ஹீரோக்களின் படங்களை எப்படி தேதியுடன் சொல்ல முடியும் என்கிறார்கள். நிறைவான தியேட்டர்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கலே அதற்குக் காரணம் என்கிறார்கள்.