விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சேலம்:''நடிகர் சங்க முக்கிய பொறுப்புகளுக்கு, நான் வர வாய்ப்பில்லை; விளையாட்டுத்தனமாக இருப்பதால், எனக்கெல்லாம் எந்த பதவியும் தர மாட்டாங்க,'' என, நடிகர் ஆர்யா கூறினார்.
சேலம், ஏ.ஆர்.ஆர்.எஸ்., தியேட்டரில், நேற்று நடந்த, 'வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் ஆர்யா, நிருபர்களிடம் கூறியதாவது:
எந்தவிதமான, 'பேக்ரவுண்டும்' இல்லாமல், ஹீரோவாக, 25வது படம் என்பது, என்னை பொறுத்தவரை, மைல்கல் தான். 25வது படத்தை, என் சொந்த பேனரில் தயாரிக்க வேண்டும் என விரும்பினேன். அதில், என் முதல் தயாரிப்பான, 'பாஸ் என்கிற பாஸ்கரன்' பட குழு மீண்டும் அமைந்திருப்பது மகிழ்ச்சி.
அந்த படத்தை போல், இதிலும், முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட், லவ் என அனைத்தும் கலந்த, நடப்பு சூழலுக்கு பொருந்தும் படமாக இருக்கும். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில், பல வசனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. 'நண்பேன்டா'
வசனத்துக்கு கிடைத்த வரவேற்பு எதிர்பாராதது.
அதைப்போல், இந்த படத்திலும், பல வசனங்கள் உள்ளன. சந்தானத்துக்கு, என்னை விட முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும்.
நடிகர் சங்கத்தில், இதுநாள் வரை, சீனியர் நடிகர்கள் பொறுப்பில் இருந்து வந்தனர். இப்போது, அந்த பொறுப்புகளை சிறப்பாக எடுத்து நடத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருப்பதால் போட்டியிடுகிறோம்.
எங்கள் அணி வெற்றி பெற்றாலும், முக்கிய பொறுப்புகளுக்கு, நான் வர வாய்ப்பில்லை. நான், விளையாட்டுத்தனமாக இருக்கிறேன் எனக்கூறி, எனக்கெல்லாம் எந்த பதவியும் கொடுக்க
மாட்டார்கள்.இவ்வாறு, ஆர்யா தெரிவித்தார்.
மது அருந்தும் காட்சி: ஆர்யா ஆவேசம்!:ஆர்யா கூறியதாவது: மது அருந்துவது, சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள், காலங்காலமாக சினிமாவில் இருந்து வருகிறது. அதில், சீரியசான விஷயமாக, மதுவை கொண்டு வருவது தவறு. இயக்குனரின் சிந்தனைக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அது, சரியா, தவறா என்பதை பார்க்கத் தான், 'சென்சார் போர்டு' உள்ளது.சினிமாவை பார்த்து தான், ஒருவர் கெட்டுப் போகிறார் என்பதை ஏற்க முடியாது. அவரவர் சொந்த விருப்பத்துக்கு, சினிமாவை சாக்கு சொல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.