அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
இதுவரை படத்துக்குப்படம் காதல் தத்துவப் பாட்டுகளைத்தான் அதிகமாக பாடி வந்திருக்கிறார் கானா பாலா. குறிப்பாக, டாஸ்மாக் பாரில் ஆட்டம் போடும் பாடல்களிலும் சரணத்தில் இன்றைய காதலின் நிலையையும், காதலர்களின் மனநிலையையும் உணர்த்தும் வகையில் இளவட்டங்களுக்கு அட்வைஸ் கொடுத்தும் வருகிறார்.
இந்தநிலையில், தற்போது கிருமி என்ற படத்தில் வாழ்க்கையின் தத்துவம் பற்றிய ஒரு பாடலை அவர் பாடியிருக்கிறார். யுத்தம் செய், முகமூடி, பீட்சா, காடு உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ள கே, இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பல சூப்பர் ஹிட் கானா பாடல்களை கொடுத்துள்ள அவர், இந்த தத்துவப்பாடலுக்கு ரொம்பவே பீல் பண்ணி இசையமைத்திருககிறாராம்.
அதாவது, வாள் வீசும் வாழ்க்கை -என்று தொடங்கும் இந்த பாடலில் எப்போதும் நான் இப்படித்தான் என்று நெஞ்சை நிமிர்த்தி செல்லாமல், சில இடங்களில் பணிந்து நடந்தால் ஒன்றும் தப்பில்லை -என்று பிடிவாதமாக இருக்கும் மனிதர்களுக்கு கருத்து சொல்லும் வகையில் வரிகள் இடம் பெற்றிருக்கிறதாம்.