மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபத்தில் மறைந்த அணு விஞ்ஞானியும், மக்களின் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் இந்திய இளைஞர்களின் கனவு நாயகன். மகாத்மா காந்தி மறைவுக்கு பிறகு இந்திய திருநாடே அழுதது அப்துல் கலாமின் மறைவிற்குத்தான். அப்படிப்பட்ட அப்துல் கலாமின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலர் முயற்சித்து வருகின்றனர். அவர் எழுதிய அக்னி சிறகுகள் என்ற சுயசரிதையின் அடிப்படையில் இதனை எடுக்க இருக்கிறார்கள்.
இதில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் நிலாமதாப் பாண்டா. இவர் அப்துல் கலாமுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதோடு ஏற்கெனவே ஐ ஏம் கலாம் என்ற படத்தையும் எடுத்தவர். ஏழை சிறுவன் ஒருவன் அப்துல்கலாமை ரோல் மாடலாக கொண்டு எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்ற கதையம்சம் கொண்ட படம் அது. தற்போது நிலாமதாப் பாண்டே அப்துல் கலாமின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார்.
தற்போது இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வில் மும்முரமாக இருக்கிறார். அப்துல் கலாமாக நடிக்க அமிதாப் பச்சன் பொருத்தமாக இருப்பார் என்று கருதிய அவர் அவருடன் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். "மேக்அப் டெஸ்ட் எடுத்து பார்ப்போம், அதில் எனக்கு 100 சதவிகிதம் திருப்தி ஏற்பட்டால் நடிக்கிறேன். சிறிய குறை தெரிந்தாலும் நடிக்க மாட்டேன். இந்தியாவே கொண்டாடும் ஒரு மகானை என் நடிப்பு கேவலப்படுத்திவிடக்கூடாது" என்று அமிதாப் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.