ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கத்தி, அரிமா நம்பி, காக்கி சட்டை, எனக்குள் ஒருவன், சகாப்தம், மீகாமன், ஆரஞ்சு மிட்டாய், கணிதன், என பல படங்களில் நடித்திருப்பவர் டேவிட். தற்போது கிருமி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் நடித்திருக்கிறார். இந்த படம் திரைக்கு வரும்போது டேவிட்டிற்கு ஓரளவு நடிக்க தெரியும் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதனால் அதன்பிறகு தமிழ் சினிமாவில் நானும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பேன் என்கிறார் இவர்.
இதுபற்றி நடிகர் டேவிட் மேலும் கூறுகையில்,
கிருமி படத்தில் நான் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதையின் லீடு ரோல் அது. ஒரு போலீஸ்காரனின் கனவு மட்டுமின்றி இன்றைய சூழலில் அவன் சந்திக்கிற பிரச்சினைகள் என ஒரு வித்தியாசமான கேரக்டர் அது. அப்படியொரு அருமையான வாய்ப்பை எனக்கு கொடுத்தமைக்காக அந்த படத்தின் இயக்குனர் அனுசரணுக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும்.
அவர் இயக்குனர் மட்டுமின்றி ஒரு எடிட்டரும்கூட. அதனால் அவருக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் எடுப்பார். அதேபோல் அவருக்கு என்னென்ன தேவையோ அதை வாங்காமல் விடமாட்டார். ரொம்ப அருமையான டைரக்டர். அதேபோல் கேமரா பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர். ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும், ஆபீஸ் சீரியலில்தான் எனது கேரியர் தொடங்கியது. அதைப்பார்த்து விட்டுத்தான் விஜய்யின் கத்தி பட வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து அதர்வா நடித்துள்ள கணிதன், அரிமாநம்பி, எனக்குள் ஒருவன், காக்கி சட்டை, சகாப்தம், மீகாமன் என 12 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஏழு படங்கள் ரிலீசாகியிருக்கின்றன. இபபடி நான் நடித்த பெரும்பாலான படங்களில் போலீசாகத்தான் நடித்திருக்கிறேன்.
இத்தனை படங்களில் போலீசாக நடித்தபோதும் கிருமி படம் எனக்கு ரொம்ப ஸ்பெசல். இந்த படம் வந்தால் எனக்கு ஒரு பெயர் கிடைக்கும். இந்த படத்தைப்பார்த்து விட்டு பரவாயில்லை இவனும் நடிக்கிறான் என்று சொல்வார்கள். இதையடுத்து ஜெயம்ரவி நடித்துள்ள தனி ஒருவன் படத்தில் வக்கீல் ரோல் பண்ணியிருக்கிறேன். தவிர, பண்டிகை படத்தில் ஒரு குடிகாரன் ரோல். முதல்முதலாக சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன். அதையடுத்து திருட்டு ரயில் படத்துக்காகவும் சண்டை காட்சியில் நடித்துள்ளேன். சகா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
இப்படி சினிமாவில் தற்போது பிசியாகி நான், கோவையில் சூரியன் எப்எம், ஹலோ எப்எம்களில் ரேடியோ ஜாக்கியாக 3 வருடங்கள் இருந்தேன். பிறகு கேப்டன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், புரோக்ராம் டைரக்டர் என பல துறைகளில் இருந்தேன். பேஷிக்கா நான் ஒரு மேடை பாடகன். நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறேன். ஆபீஸ், தென்றல், நாதஸ்வரம், என பல சீரியல்களில் நடித்திருக்கிறேன்.