பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கேமராமேன்களின் ஆழ்மனதுக்குள் புதைந்து கிடக்கும் டைரக்சன் ஆசை நாளாக நாளாக வளர்ந்து ஒரு நாள் வெடித்து டக்கென அவர்களை இயக்குனர்களாக மாற்றிவரும் அதிசயத்தை நாம் தொடர்ந்து பார்த்துதானே வருகிறோம்.. சந்தோஷ் சிவன், கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனனிலிருந்து தற்போதைய விஜய் மில்டன், வேல்ராஜ் வரை எல்லோரும் இதே ரூட்டில் டைரக்சன் என்ட்ரி போட்டவர்கள தான். அந்தவகையில் மலையாள சினிமாவின் முக்கியமான, முன்னணியில் உள்ள ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் இப்போது இயக்குனர் தொப்பியை எடுத்து அணிய இருக்கிறார்..
தனது முதல் படத்திலேயே பிருத்விராஜை இயக்கவிருக்கும் சுஜித் வாசுதேவன் ஒன்றும் லேசுப்பட்ட ஆளில்லை.. மலையாள த்ரிஷ்யம், தமிழ் பாபநாசம் என ஜீத்து ஜோசப்பின் கண்களாக இருந்து வெற்றிகளை கொடுத்த ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரார். அதுமட்டுமல்ல பிருத்விராஜின் பல படங்களுக்கு கேமராமேனாக ஒளிப்பதிவு செய்தவர். இப்போதும் அவரது அனார்கலி, அமர் அக்பர் ஆண்டனி படங்களுக்கு சுஜித் தான் கேமராமேன்.. ஆக பிருத்விராஜை ஒகே பண்ணுவதில் சுஜித்துக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. இந்த இரண்டு படங்களை முடித்ததும் வரும் அக்டோபரில் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.