மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அதிரடிக்குப் பெயர்போன உபேந்திரா யாரென்று தெரியாதவர்களுக்கு விஷால் நடித்த 'சத்யம்' படத்தில் மிரட்டல் போலீஸ் ஆஃபிஸராக வந்தாரே அவர்தான் இவர். இங்கே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்களான அஜித்தின் 'வரலாறு', லாரன்ஸின் 'காஞ்சனா' ஆகியவற்றின் கன்னட ரீமேக்குகளில் நடித்து செமத்தியான கல்லா கட்டியவரும் இவரேதான். கன்னட திரையுலகில் உபேந்திரா நடிக்கிற படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே ஒரு பரபரப்பு கிளம்பும்.
காரணம் அவருடைய ஆக்ஷனும் காமெடியும் அந்தமாதிரி ரணகளமாக இருக்கும். அதேமாதிரி அவர் வசனம் பேசுகிற ஸ்டைலை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இப்போது 'உப்பி-2' என்கிற படத்தை அவரே இயக்கி நடித்தும் வருகிறார்.. அதென்ன 'உப்பி-2' என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். 1999ல் இவர் நடிப்பில் வெளியான 'உபேந்திரா' என்கிற சைக்காலஜிகல் த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.
இப்போது விஷயம் என்னவென்றால் உபேந்திரா பட ரிலீசாகும் அதே நாளில் தான் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்ரீமந்துடு' படமும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் உபேந்திரா படங்கள் என்றால் கன்னட தியேட்டர்களில் முக்கால்வாசி உபேந்திராவுக்கே சரியாக போய்விடும். ஆந்திராவை பொறுத்தவரை அவர்களது படங்களின் இரண்டாவது மார்க்கெட் கர்நாடகா தான். அதனால் இந்த நேரத்தில் மகேஷ்பாபு படத்தை ரிலீஸ் பண்ணினால் கர்நாடகாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகிவிடும். ஆகவே ஒரு வாரம் தள்ளி மகேஸ்பாபு படத்தை ரிலீஸ் பண்ண முடிவு செய்துள்ளார்களா. ஏற்கனவே பாகுபலி' படத்திற்காகவும் 'ஸ்ரீமந்துடு' படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.