'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி உள்ள படம் விசாரணை. இந்தப் படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்க தேர்வாகி உள்ளது. இதுபற்றி வெற்றி மாறன் கூறியதாவது:
முன்பு எனக்கு சர்வதேச பட விழாக்கள் பற்றித் தெரியாது. ஆடுகளம் படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், இதை ஏன் சர்வதேச படவிழாக்களுக்கு அனுப்பவில்லை என்று கேட்டு அதுபற்றி பல தகவல்களைச் சொன்னார். அதன் பிறகுதான் காக்கா முட்டை படத்தை அனுப்பினேன். இப்போது விசாரணை படத்தை அனுப்புகிறேன்.
விசாரணை வெறும் கற்பனை கதையல்ல. சந்திரகுமார் என்ற இளைஞரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டது. இதனை அவரே லாக்அப் என்ற பெயரில் நாவலாக எழுதியிருக்கிறார். அதை திரைக்கதையாக்கி படமெடுத்திருக்கிறேன். ஏதாவது ஒரு விஷயம் என்னை பாதித்ததால்தான் அதனை நான் படமாக எடுப்பேன். ஆடுகளம் படத்திற்கு பிறகு அப்படி எந்த பாதிப்பும் எனக்கு வரவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. சந்திரகுமாரின் லாக்அப் நாவல் பாதிப்பை ஏற்படுத்தியது அதனை தற்போது இயக்கி இருக்கிறேன். அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளிவருகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தின் கதையை தயார் செய்து விட்டேன். அந்தப் பணிகள் தீபாவளிக்கு பிறகு துவங்குகிறது என்கிறார் வெற்றிமாறன்.