ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புராண காலத்தில் பலம் வாய்ந்த பெண்ணாக விளங்கிய திரவுபதி கேரக்டரில் நடிக்க தனக்கு விருப்பம் என்று பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். கவர்ச்சிக்காக மட்டுமே, இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த நடிகை மல்லிகா ஷெராவத், சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மூலம், தனக்கு குணசித்திர வேடமும் பொருந்தும் என்பதை நிரூபித்தார். இந்நிலையில், யாரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க தங்களுக்கு விருப்பம் என்று கேட்டதற்கு, புராண காலத்தில் பலம் வாய்ந்த பெண்ணாக விளங்கியவர் திரவுபதி. அத்தகைய கேரக்டர்களில் தனக்கு நடிக்க விருப்பம். தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும், ஆனால், சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளதால், கவனமாக கதை கேட்டு வருவதாக மல்லிகா ஷெராவத் கூறினார்.