சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
இந்தியத் திரையுலகில் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதிய இரண்டு கதைகளான 'பாகுபலி, பஜ்ரங்கி பைஜான்' ஆகிய படங்கள் மூலம் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் நிகழ்ந்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கதைதான் என்பதை விஜயேந்திர பிரசாத் நிரூபித்துள்ளார். 'பஜ்ரங்கி பைஜான்' கதையை அவர் ரஜினிகாந்துக்கும் சொன்னதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறாராம்.
சமீபத்தில் ஒரு விழாவில் ரஜினிகாந்தும், விஜயேந்திர பிரசாத்தும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அப்போது விஜயேந்திர பிரசாத் அரசியல் பின்னணி கொண்ட ஒரு வித்தியாசமான கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். கதையை ஆர்வத்துடன் கேட்ட ரஜினிகாந்த், கதை நன்றாக இருப்பதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தை விஜயேந்திர பிரசாத்தே இயக்க விரும்புவதாகவும் தெரிகிறது.
ரஜினி விரைவில் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தையடுத்து ஷங்கர் இயக்க உள்ள 'எந்திரன் 2' படத்தில் நடிக்கப் போகிறார். இதற்கும் அடுத்து விஜயேந்திர பிரசாத் கதையில் ரஜினிகாந்த் 2016 கடைசியில் நடிக்கலாம் என்கிறார்கள்.