ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஓ காதல் கண்மணி படத்தை துல்கர்சல்மான்-நித்யாமேனனை வைத்து இயக்கினார் மணிரத்னம். அப்படம் இளவட்ட ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றியை எட்டிப்பிடித்தது. அதனால் தனது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கியிருக்கிறார் மணிரத்னம். அந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கிடையே, மற்ற கேரக்டர்களுக்கான ஆடிசன் சென்னையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மணிரத்னமோ லண்டனில் கடந்த மாதத்தில் இருந்தே முகாமிட்டிருக்கிறார். தனது உதவியாளர்கள் மற்றும் சில எழுத்தாளர்களுடன் அங்கிருந்தபடியே ஸ்கிரிப்ட் ஒர்க் வேலைகளை செய்து வருகிறார் மணிரத்னம்.
அதோடு, புதிய படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில்தான் நடைபெற உள்ளதாம். அதனால் ஸ்கிரிப்ட் ஒர்க்கிற்கு இடையே அவ்வப்போது அங்கு கேமரா கண்கள் அதிகமாக படாத லொகேசன்களையும் சென்று பார்வையிட்டு வருகிறாராம் மணிரத்னம். இம்மாதம் இறுதியில் அவர் சென்னை திரும்பிய பிறகு ஆடிசன் செய்யப்பட்ட கலைஞர்களில் கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்த பிறகு படப்பிடிப்பு தேதியை முடிவு செய்கிறாராம். மேலும், மணிரத்னத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலேயே அதிகமாக நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.