ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'பாகுபலி' படம் வெளிவந்த 24 நாட்களுக்குள்ளாக 500 கோடி ரூபாயைக் கடந்து தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. நேற்று கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிறு முடிய இந்தப் படம் 500 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டும் உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாயும், தமிழில் சுமார் 65 கோடி ரூபாயும், ஹிந்தியில் 105 கோடி ரூபாயும், கேரளாவில் 10 கோடிக்கு மேலும், கர்நாடகாவில் 25 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் ஒரு டப்பிங் படம் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளதை ஹிந்தித் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இந்தப் படத்தை ஹிந்தியில் வாங்கி வெளியிட்ட கரண் ஜோஹரின் மார்க்கெட்டிங்கிற்கு கிடைத்த வெற்றி அது என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
24 நாட்கள் வசூலாக 505 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், அதில் 'நெட்' தொகையாக சுமார் 375 கோடி ரூபாய் வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். ஹிந்தியில் வெளியான 'பிகே, தூம் 3' ஆகிய படங்கள்தான் இதுவரை 500 கோடி ரூபாய் வசூலித்த படங்களாக இருந்தன. அந்த வரிசையில் முதன் முறையாக ஒரு தென்னிந்தியப் படம் இடம் பெற்றுள்ளது.