டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்குத் திரையுலகின் பல முன்னணி இயக்குனர்கள் பழைய தமிழ்ப் படங்களை வாங்கிப் பார்த்து அதை அப்படியே இந்தக் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து புதிய படங்களாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற பல தெலுங்குத் திரைப்படங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை எந்த தமிழ்ப் படத்திலிருந்து சுடப்பட்ட கதையாக இருக்கும் என்பதை தீவிர சினிமா காதலர்கள் கண்டுபிடித்து விடலாம். அவ்வளவு ஏன் ? ராஜமௌலி இயக்கி 500 கோடி ரூபாயைக் கடந்த ஓடிக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தின் மையம் கூட எம்ஜிஆர் நடித்த 'அடிமைப் பெண்' படம்தானே?. இப்படி தெலுங்கில் பல தமிழ்ப் படங்களைக் காப்பிடியத்து படமாக எடுப்பது பல வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.
இப்போது தெலுங்கில் பழைய தெலுங்குப் படங்களையே காப்பியடித்து படங்களை எடுக்கிறார்கள் என சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'ஸ்ரீமந்துடு' படம் சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடிக்க பாலசந்தர் இயக்கி 1988ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி வெளிவந்த 'ருத்ரவீணா' என்ற தெலுங்குப்படத்தின் அப்பட்டமான தழுவல் என சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
'ருத்ரவீணா' படத்திற்கு அப்போது சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என்ற விருதும், படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகருக்குமான தேசிய விருதும் கிடைத்தன. அந்தப் படம் அதன் பின் கமல்ஹாசன், சீதா, ஜெமினிகணேசன் ஆகியோர் நடிக்க 'உன்னால் முடியும் தம்பி' என்ற பெயரில் ரீமேக் ஆகி அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளிவந்தது.
இன்னும் சில நாட்களில் 'ஸ்ரீமந்துடு' அந்தப் படத்தின் காப்பிதானா என்பது முழுமையாகத் தெரிந்துவிடும். பணம் கொடுத்து உரிமை வாங்கி இப்படத்தைத் தயாரித்துள்ளார்களா, அல்லது அப்படியே கதையைச் சுட்டு விட்டார்களா என குற்றம் சாட்டுபவர்கள் கேள்வியும் எழுப்புகிறார்கள்.