தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்தில், தானும் இருப்பதாகவும், அப்படத்தில், தனக்கு பவர்புல் ரோல் வழங்கப்பட்டுள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
இதுகுறித்து, வடஇந்திய ஊடகத்திற்கு, ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ரஜினி சாருடன் தான் நடிக்க உள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன், ஏதோ அந்தரத்தில் மிதப்பது போன்று இருந்தது. ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதை, இந்த ஜென்மத்தில் நான் அடைந்த பெரும்பாக்கியமாக கருதுகிறேன்.
இயக்குனர் ரஞ்சித், கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வளர்ந்து வருகிறார். அவரின் இயக்கத்தில் பணியாற்ற இருப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
மற்ற ஹீரோயின்களைப்போல ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே தோன்றுவது போலன்றி, இந்த படத்தில் தனக்கு பவர்புல் ரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக, ரஜினியை நேரில் சந்தித்தது இனிய அனுபவமாக இருந்தது என்று ராதிகா ஆப்தே அந்த பேட்டியில் கூறியுள்ளார்.