'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஷால் சமீப நாட்களாக கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறார். நடிகர் சங்க விவகாரத்தில் எதிர் தரப்பினரிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்கிறார் விஷால். இந்த தாக்குதல் அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும், மற்ற பிரச்சனைகளில் கருத்து சொல்லியும் கல்லடிபடுகிறார். கேரளாவில் நாயை கொல்வதற்கு எதிராக விஷால் சொன்ன கருத்துக்கு மலையாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் அப்துல் கலாம் இறந்ததும் சினிமா நடிகர்கள் யாரும் அவருக்கு அஞ்சுலி செலுத்தப்போகாதது குறித்து கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் அது என் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். விஷால் இப்படி சொன்னதைக்கேட்டதும் மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.
“உங்கள் தியேட்டரில் போய் பார்ப்பதும்... திருட்டு விசிடியில் பார்ப்பதும் எங்களின் தனிப்பட்ட விருப்பம். அப்படி இருக்க திருட்டு விசிடிக்கு எதிராக சவுண்ட் கொடுப்பது ஏன்?” என்று தொடங்கி சகட்டுமேனிக்கு விஷாலை கழுவி ஊற்றி வருகின்றனர்.