பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு படம் எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாமல் இருந்த சூழலில், அப்படத்தை ரிலீஸ் செய்ய நடிகர் விஜய் உதவியுள்ளார். இதனால் வாலு படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து இந்தமாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை மகாபலிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த விழாவில் டி.ராஜேந்தரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் டி.ஆர். பேசியதாவது... நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான். ஒரு நடிகன் வளர்துவிட்ட பிறகு தன்னடக்கத்துடன் இருப்பது ரொம்ப கஷ்டம். எஸ்.ஏ.சி அவர்களும் நானும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் பார்ப்பேன். நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது அவரை பார்ப்பது போன்றே நினைத்துக் கொள்வேன். அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல தந்தை, நல்ல இயக்குநர் அவருடைய மகன் விஜய் அவர்களை எப்படி படிப்படியாக உயர்த்தி கொண்டுவந்தாரோ அதை பார்த்து நான் பெருமைபட்டவன். அது ஏன் என்று கேட்டால் அவரை போலவே என் மகன் சிம்புவையும் உருவாக்கி வருகிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அது ஏன் என்று எனக்கு தெரியாது. எஸ்.ஏ.சி அவர்களும் அவருடைய மனைவி ஷோபா அவர்களும் நானும் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது அவர்களிடையே நான் பழகும்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் பல விஷயங்களை பேசினோம்.
விஜய் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்டபிறகும் டி.ஆரின் ரசிகன் என்று கேள்விப்பட்டபிறகு எனக்கு சந்தோஷமாக இருந்தது. தலைவா படப்பிரச்சனையின்போது சிம்பு அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணா நான் உங்களுக்கு பின்னே துணையாக இருப்பேன் என்று பல வருடங்களுக்குமுன் ஒரே ஒரு ட்வீட் செய்திருந்தான், அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது சிம்புவின் வாலு படப்பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார் விஜய். சிம்பு இன்னொருவரின் ரசிகனாக இருக்கலாம் ஆனால் விஜய்க்கு சிம்பு நண்பன் மட்டுமல்ல தம்பியும் கூட..
இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.
முன்னதாக விழாவில் டி.ராஜேந்தர் நகைச்சுவையாக பேசியபோது விஜய் விழுந்து விழுந்து சிரித்தார். ஒருக்கட்டத்தில் அவரே எழுந்து நின்று அண்ணே போதும் என்கிற பாணியில் வணக்கம் சொல்லி அமர்ந்தார். அந்தளவுக்கு நிகழ்ச்சியை கலகலப்பாக்கிவிட்டு சென்றார் டி.ராஜேந்தர்.