பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டிவியைப் பொறுத்தவரை நிறைய தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுமையான நிகழ்ச்சிகளுக்கு சமீபகாலமாக அவர்களே முன்னோடியாகவும் இருந்து வருகிறார்கள். சில சேனல்கள் அவர்களை காப்பியடித்துதான் வெவ்வேறு தலைப்புகளை அதேபோன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். அதனால் நேயர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.
இருப்பினும், பல விசயங்களில் நேயர்களை சந்தோசப்படுத்தும் விஜய் டிவி ஒரு விசயத்தில் மட்டும் அவ்வப்போது நேயர்களை டென்சன் செய்கிறது. அதாவது, நடன நிகழ்ச்சிகளுக்கு நீதிபதிகளாக வரும் நபர்களே சில சமயங்களில் பிரச்சினைகளை பெருசுபடுத்தி போட்டியாளர்களுக்கு டென்சன் கொடுக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால் விஜய் டிவியின் நேயர்களுக்கு சில சமயங்களில் எரிச்சலையும் கொடுக்கிறது.
மேலும்,தற்போது ஜோடி நம்பர் ஒன் 8-வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மகேஷ், ரம்யா இருவரும் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு நடன மாஸ்டர் கல்யாண், நடிகை ராதா இருவரும் நடுவர்களாக உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒருநாள் மேடையில் கார்த்திக்-யாமினி ஜோடி நடனமாடியது. ஆனால் யாமினி சரியாக நடனமாடவில்லை என்று ராதா குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு நடன மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததைதான் நான் செய்தேன் என்று யாமினி சொல்ல பிரச்சினை பெரிதாக விட்டது. அதையடுத்து அந்த நடன மாஸ்டரை வரவைத்து கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டது.
அவரோ, என் மீது தவறில்லை. நான் சரியாகத்தான் சொல்லிக்கொடுத்தேன். யாமினிதான் சரியாக நடனமாடவில்லை என்று சொன்னார். அப்போது, இவர் ஒருநாளும் ஒழுங்காக வகுப்பு எடுக்கவில்லை. வரச்சொல்வார் நான் சென்றால். அன்றைய தினம் அவர் வரமாட்டார். இப்படியே என்னை ரொம்ப டென்சன் செய்துதான் பயிற்சி கொடுத்தார். அதனால்தான் எனக்கு நடனம் சரியாக வரவிலலை என்று மாஸ்டர் மீது குற்றச்சாட்டை திருப்பி விட்டார்.
அதையடுத்து, மற்றவர்கள் மீது தவறை திருப்பிவிட்டு தப்பித்துக்கொள்ள நினைப்பது தவறு என்று தீர்ப்பு சொல்லி அந்த பஞ்சாயத்தை முடித்து வைத்தார் நடிகை ராதா.