Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நேயர்களை வெறுப்பேற்றும் விஜய் டிவியின் பஞ்சாயத்து!

04 ஆக, 2015 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Vijay-tv-upsets-their-viewers

விஜய் டிவியைப் பொறுத்தவரை நிறைய தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுமையான நிகழ்ச்சிகளுக்கு சமீபகாலமாக அவர்களே முன்னோடியாகவும் இருந்து வருகிறார்கள். சில சேனல்கள் அவர்களை காப்பியடித்துதான் வெவ்வேறு தலைப்புகளை அதேபோன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். அதனால் நேயர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.


இருப்பினும், பல விசயங்களில் நேயர்களை சந்தோசப்படுத்தும் விஜய் டிவி ஒரு விசயத்தில் மட்டும் அவ்வப்போது நேயர்களை டென்சன் செய்கிறது. அதாவது, நடன நிகழ்ச்சிகளுக்கு நீதிபதிகளாக வரும் நபர்களே சில சமயங்களில் பிரச்சினைகளை பெருசுபடுத்தி போட்டியாளர்களுக்கு டென்சன் கொடுக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால் விஜய் டிவியின் நேயர்களுக்கு சில சமயங்களில் எரிச்சலையும் கொடுக்கிறது.


மேலும்,தற்போது ஜோடி நம்பர் ஒன் 8-வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மகேஷ், ரம்யா இருவரும் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு நடன மாஸ்டர் கல்யாண், நடிகை ராதா இருவரும் நடுவர்களாக உள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒருநாள் மேடையில் கார்த்திக்-யாமினி ஜோடி நடனமாடியது. ஆனால் யாமினி சரியாக நடனமாடவில்லை என்று ராதா குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு நடன மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததைதான் நான் செய்தேன் என்று யாமினி சொல்ல பிரச்சினை பெரிதாக விட்டது. அதையடுத்து அந்த நடன மாஸ்டரை வரவைத்து கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டது.


அவரோ, என் மீது தவறில்லை. நான் சரியாகத்தான் சொல்லிக்கொடுத்தேன். யாமினிதான் சரியாக நடனமாடவில்லை என்று சொன்னார். அப்போது, இவர் ஒருநாளும் ஒழுங்காக வகுப்பு எடுக்கவில்லை. வரச்சொல்வார் நான் சென்றால். அன்றைய தினம் அவர் வரமாட்டார். இப்படியே என்னை ரொம்ப டென்சன் செய்துதான் பயிற்சி கொடுத்தார். அதனால்தான் எனக்கு நடனம் சரியாக வரவிலலை என்று மாஸ்டர் மீது குற்றச்சாட்டை திருப்பி விட்டார்.


அதையடுத்து, மற்றவர்கள் மீது தவறை திருப்பிவிட்டு தப்பித்துக்கொள்ள நினைப்பது தவறு என்று தீர்ப்பு சொல்லி அந்த பஞ்சாயத்தை முடித்து வைத்தார் நடிகை ராதா.


ஆனால், இதுபோன்று அடிக்கடி விஜய் டிவி நிகழ்ச்சிகளில், பங்கேற்பவர்களே மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த மாதிரி விசயங்களை அவர்களே உருவாக்கி அதை ஒரு பப்ளிசிட்டியாகவே செய்து வருகின்றனர். ஆனால், இது தொடர் கதையாகி விட்டதால், விஜய் டிவியின் இந்த செயல் நேயர்களை வெறுப்பேற்றி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in