டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்பெல்லாம் கதாநாயகிகள் விசயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார் ஜீவா. மார்க்கெட் இல்லாத நடிகையோ, புதுவரவு நடிகையோ யாராக இருந்தாலும் ஓகே என்று கூறி விடுவார். ஆனால், சமீபகாலமாக தனது மார்க்கெட் மந்தமாக இருந்து வருவதால், மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளுடன் கூட்டணி அமைத்தால் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்.
அதனால்தான், திருநாள் படத்தில் நடிப்பதற்கு ஒரு இளவட்ட நடிகையிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் கொடுக்கப் பட்டிருந்த நயன்தாராவை மீண்டும் அணுகினார். ஏற்கனவே பேசி வைத்திருந்த ப்ராஜக்ட் கிடப்பில் போடப்பட்டதால், அந்த கால்சீட்டைத்தான் இப்போது பயன்படுத்துகிறோம் என்று சொல்லி கமிட் பண்ணினார். வேறுவழியில்லாமல் நயன்தாராவும் அதற்கு கட்டுப்பட்டார்.