ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில், 'காஞ்சிவரம்' படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன் மீண்டும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இயக்குநர் விஜய், அமலா பால் தம்பதி தயாரிக்கும் இப்படம் மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்படவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து 28 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மலையாளப் படம் ஒன்றை இயக்கவுள்ளார் ப்ரியதர்ஷன். மலையாளத்தை பொறுத்தவரை மம்முட்டி நடித்த 'பழசிராஜா' படம்தான் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படம். அதைவிட அதிகமான பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்த பிரம்மாண்ட படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த 'ஃபுல் ஹவுஸ் புரொடக்ஷன்' என்ற கம்பெனி உடன் அசர்பைஜான் என்ற வெளிநாட்டை சேர்ந்த 'ரௌஃப் ஜி மெஹ்தி' என்ற கம்பெனியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அதனாலோ என்னவோ, இப்படம் மலையாளம் மற்றும் அசர்பைஜான் நாட்டு மொழியான 'அசரி'யிலும் தயாரிக்கப்படுகிறது. அதோடு, ஆங்கிலம், ரஷ்யா, டர்க்கிஷ், சீனா ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிட உள்ளனர். மோகன்லாலுடன் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த கிட்டத்தட்ட 20 கலைஞர்களும் நடிக்க இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ரஷ்யாவில் நடைபெறுகிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா கோபிநாத் நடிக்கிறார்.