தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
தமிழ் சினிமாவில் பரபரப்பாக இல்லையென்றாலும் பரவலாக பாடல்கள் எழுதி வருபவர் சொற்கோ. அதோடு சில படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார். அவரிடத்தில், சமீபகாலமாய் திரையிசைப் பாடல்களின் தரம் மற்றும் போட்டிகள் பற்றி கேட்டபோது, அவர் சொன்ன பதில்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
ஜோக்கர் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் எனது முதல் பாடல் பதிவானது. அந்த பாடலை இளையராஜாவே பாடினார். உயிர் முழுதும் அவளே ஓவியம், எழுதி வைத்தாள் எனக்குள் காவியம். குமுதம் பத்திரிகையில் 1995ல் இளையராஜாவும், சுஜாதாவும் சேர்ந்து ஒரு போட்டி வைத்தனர். திரைப்பட பாடலாசிரியர்களுக்காக நடந்த அந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் நான் வெற்றி பெற்று தங்க பேனா பரிசு பெற்றேன். இந்த போட்டியில் ஜெயித்த பிறகுதான் ஜோக்கர் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றேன்.
அதன்பிறகு, அழகி படத்தில் ஒரு சுந்தரி வந்தாளாம் அந்த முந்திரி முந்திரி தோப்புள்ள, மனசெல்லாம் படத்தில் குயிலே குயிலே, ஜூலி கணபதி படத்தில் மின்மினி பார்வைகள், மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க படத்தில் ஊருக்கு அப்பாலதான ஒதுங்கி நிற்கிற சாமி, இப்போது வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள செளகார் பேட்டை படத்தில் சவுகார் பேட்டை சேட்டு நீ வீட்ட நல்லா பூட்டு. 12 மணி லேட்டு, இது பேயி வரும் ரூட்டு. பயம் பயம் பயம் என்கிற இந்த பாட்டு அதிரடியாக வந்துள்ளது. இது பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறேன். நாரதன் படத்தில் மணிசர்மா இசையில தடதடதடதட ட்ரெயினுதான் -என்றொரு பாடல் எழுதியிருக்கிறேன் இப்படி பெரிய பரபரப்பு இல்லையென்றாலும் அவ்வப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அவரிடத்தில், நடிகர்கள் பாடல்கள் எழுதத் தொடங்கியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது,
இலக்கணம் அறியாதவர்கள் பாடல்கள் எழுதுவது மாதிரி இதுவும் ஒரு விபத்துதான். அதேசமயம், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் போன்றவர்க ளெல்லாம் பெரிய அளவில் படிக்காதவர்கள். ஆனால் மேதைகளாக இருந்தவர்கள். அதேபோன்று நடிகர்களும் திறமையானவர்களாக இருக்கும்பட்சத்தில் பாடல்கள் எழுதலாம். அதில் ஒன்றும் தவறில்லை.
மேலும், முன்பெல்லாம் சில பாடகர்கள், சில பாடலாசிரியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் இப்போது கிட்டத்தட்ட 150 பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். அதேபோல் ஏராளமான பாடகர்கள் உள்ளனர். அதேமாதிரி இசையமைப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. ஒரு திறந்தவெளி போன்று யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம் என்கிற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது மூச்சு இருந்தா யார் வேண்டுமானாலும் முத்தெடுக்கலாம். இதில் தகுதி உள்ளவர்கள் ஜெயிப்பார்கள். தகுதி இல்லாதவர்கள் காணாமல் போய் விடுவார்கள். இது ஆரோக்கியம் கலந்தது. அதேசமயம் ஆபத்தும் நிறைந்தது.
மேலும், சுரதா, நா.காமராசன், வைரமுத்து ஆகிய கவிஞர்கள் என்னை வெகுவாக பாதித்திருக்கிறார்கள். அவர்களின் பாடல்களில் கவித்துவம் இருக்கும். ஒரு சொல் நயம் இருக்கும். ஆனால் இப்போது, தேமா புளிமா தெரியாதவன். இலக்கணம் அறியாதவன், நேரசை நிறையசை புரியாதவன், இலக்கணம் இலக்கியம் படிக்காதவர்களெல்லாம் பாடல்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம் பாடல் துறைக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த பாடலாசிரியர் சொற்கோ, பேரரசு இயக்கத்தில் அஜித் நடித்த திருப்பதி படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். அதில் இவருக்கு பலகுரல் மன்னன் கேரக்டர். அதையடுத்து தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்திலும் நடித்திருக்கிறார்.