ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் அம்மாவுடன்தான் சினிமாத்துறைக்குள் வளைய வருவார்கள். இதில் சிலர் அம்மாவை பாதுகாப்புக்காக மட்டுமே அழைத்து வருவார்கள். இன்னும் சிலர் தயாரிப்புத்துறையிடமிருந்து தங்களுக்கு வரவேண்டிய சலுகைகளை பெற்று தருவதற்காக அம்மாக்களைஅழைத்து வருவார்கள். இதில் கீர்த்தி சுரேஷை எடுத்துக்கொண்டால், அவருக்கு அம்மா மேனகாதான் எல்லா விசயத்திலுமே செண்டிமென்டாம். குறிப்பாக, யாராவது இயக்குனர்கள் கதை சொல்ல வருகிறேன் என்று சொன்னால், அம்மா தன்னுடன் எப்போது இருப்பாரோ அந்த நேரத்தை சொல்லித்தான் அவர்களை வரவைப்பார். தன்னைவிட அம்மாதான் கதைகளை சரியாக கேட்டு முடிவெடுப்பார் என்பதே இதற்கு காரணமாம்.
மேலும், இன்னொரு முக்கியமான சென்டிமென்டையும் கடைபிடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதாவது ஒரு படத்தில் முதல் நாள் நடிக்கச் செல்வதற்கு முன்பு, அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கின பிறகுதான் நடிக்க கேமரா முன்பு செல்வாராம் அவர். அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் நடிக்கும்போது, அம்மாவிடம் ஆலோசனை பெறுவதோடு, நடித்து முடித்த பிறகு அவர் ஓகே என்றால்தான் அதோடு விடுவாராம். திருப்தி இல்லை என்று அவர் சொன்னால், டைரக்டரை அணுகி இன்னொரு டேக் எடுங்கள் என்பாராம் . அந்த அளவுக்கு அம்மாவின் கருத்துக்களுக்கு முதலிடம் கொடுக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.