'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெட்ராஸ் கேதரின் தெரசா அதன்பிறகு தமிழில் அதர்வாவுடன் நடித்த கணிதன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதையடுத்து விஷ்ணுவுடன் வீர தீர சூரன், சிம்புவுடன் கான் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே அனுஷ்கா நடித்துள்ள வரலாற்று படமான ராணி ருத்ரம்மா தேவியிலும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கேதரின் தெரசா. அப்படமும் பாகுபலி போன்று தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது.
ஆனால் அது சரித்திர பின்னணி கொண்ட கேரக்டராக இருந்தபோதும் கதைப்படி அவர் ஒரு கவர்ச்சிகரமான கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சரித்திர காலத்து கிளாமர் உடையணிந்து நடித்துள்ளாராம் தெரசா. அதோடு, ஒரு படுக்கையறை காட்சியும் உள்ளதாம். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கேத்ரின், அந்த காட்சியை இதுவரை அவர் எந்த படத்திலும் நடித்திராத வகையில் கூடுதல் கவர்ச்சியாக படமாக்கியபோது அதிர்ச்சியடைந்து விட்டாராம். அதோடு தனது அதிருப்தி மனநிலையை அவர் அப்பட டைரக்டர் குணசேகரிடம் சொன்னதையடுத்து, அதிகப்படியான ஆபாசம் இல்லாத அளவுக்கு படமாக்கினாராம். இருப்பினும், மற்ற படங்களில டீசன்டாக நடித்துள்ள கேதரின் தெரசா அந்த படம் வெளியானால் தனது இமேஜ் மாறிவிடக்கூடும் என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம்.