ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடன சூறாவளி பிரபுதேவா ஹீரோவாக, டைரக்டராக வளர்ந்து விட்ட நிலையில், அடுத்தபடியாக தயாரிப்பாளராகியிருக்கிறார். பிரபுதேவா ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தை தொடங்கியிருக்கும் அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தொடங்கியிருக்கிறார்.
அதில் முதல் படத்தை திங் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகை அமலாபாலுடன் இணைந்து தயாரிக்கிறார். பிரியதர்ஷன் இயக்கும் அப்படத்தில் பிரகாஷ்ராஜ் நாயகனாக நடிக்கிறார். அதையடுத்து, ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமண்-ஜெயம்ரவி மீண்டும் இணையும் படத்தை தான் மட்டுமே தனது பிரபுதேவா ஸ்டுடியோ மூலம் தயாரிக்கிறார் பிரபுதேவா.
அதேபோல், மூன்றாவது படத்தில் ஐசரி கணேஷனின் மகன் வருண் நடிக்கிறார். விக்டர் அந்த படத்தை இயக்குகிறார். ஆக, ஜெயம்ரவி, வருண் நடிக்கும் இந்த இரண்டு படங்களுக்குமே டி.இமான் இசையமைக்கிறார். இந்த இரண்டு படங்களையுமே பிரபுதேவா ஸ்டுடியோ மட்டுமே தயாரிக்கிறது.
இவ்விழாவில் ஜெயம்ரவி பேசும்போது, இந்த படத்தின் கதையை ரோமியோ ஜூலியட் லட்சுமண் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அந்த ஒன்லைனை முதலில் நான் பிரபுதேவா மாஸ்டருக்கு போனில் சொன்னேன். அதுவே அவருக்கு பிடித்து விட்டது. அதன்பிறகுதான் லட்சுமண் அவரை சந்தித்து கதையை சொன்னார். அவருக்கு அந்த கதையில் முழு நம்பிக்கை ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்.
மேலும், பிரபுதேவா அவர்களை நான் படிக்கிற காலத்தில் இருந்தே ரசித்தவன். இப்போதும் அவரது சிறந்த ரசிகன் நான். அவரது இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் நடித்துள்ளேன். அந்த படத்தில் நடித்தபோது அவரிடம் ஏற்கனவே ஒர்க் பண்ணிய நடிகர் - நடிகைகள் எனக்கு போன் போட்டு, பிரபுதேவா படத்தில் நடிக்கிறீர்களா. ஆளை காலி பண்ணியிருப்பாரே என்பார்கள். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால், பின்ன அவர் கம்போஸ் பண்ணும் பாடல்களில் நடனமாடுவது சாதாரண விசயமா? என்று பயமுறுத்தும் தொனியில் பேசுவார்கள்.
ஆனால், என்னை ஒருநாள்கூட பிரபுதேவா மாஸ்டர் திட்டியதே இல்லை. அதற்காக நான் ரொம்ப சிறப்பாக நடனமாடியிருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரிடம் திட்டு வாங்காத அளவுக்கு ஆடியிருக்கிறேன் என்றே கருதுகிறேன்.
இன்னும் சொல்லப்போனால் என்னிடம் அவர் அதிக பாசமாகவே இருப்பார். அவரை ஒரு நடன மாஸ்டர் என்றோ, இயக்குனர் என்றோ நினைக்கவே தோனாது. அவரைப்பார்த்தாலே ஒரு அண்ணன் பீல்தான் வரும். அப்படிப்பட்ட அவரோட நடனம், இயக்கத்தில் நடித்து விட்ட நான், இப்போது அவர் தயாரிக்கும் படத்திலேயே நடிக்கிறேன். அது பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது என்றார் ஜெயம்ரவி.