ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் பிரபல நடிகரான நாகார்ஜுனா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகின்றார்.நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் இப்படத்திற்கு தமிழில் தோஸ்த் எனவும் தெலுங்கில் மித்ருலு என்றும் பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்து ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜுனா மாற்று திறனாளியாகவோ நோய்வாய்ப்பட்டவராகவோ இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுவதே ரசிகர்களின் சோகத்திற்கு காரணம்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாகார்ஜுனா சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ரசிகர்கள் படம் முழுக்க நாகார்ஜுனா சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது, இடைவேளைக்கு பின்னராவது குணமடைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகை தமன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.