ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகம் சர்தார் என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இயக்குநர் பாபி இயக்கும் இப்படத்தை நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. பொதுவாக தான் நடிக்கும் படங்களில் பவன் கல்யாணின் தலையீடு அதிகமாக இருக்கும் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுவதுண்டு. சர்தார் படத்தில் பவன் கல்யாணின் தலையீடு சற்று அதிகமாக இருப்பதாக படப்பிடிப்பு தளத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள், நாயகி தேர்வு, திரைக்கதை அமைத்தல், இயக்கம் என அனைத்திலும் பவன் கல்யாண் தலையிடுவது இயக்குநர் பாபியை கடுப்பேற்றியுள்ளது. இதனால் தான் நினைத்தபடி படத்தை திரையில் கொண்டு வர முடியாது என தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி பாபி வருத்தப்படுகின்றாராம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெறுகின்றது.