'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் செல்பிபுள்ள சமந்தா. அதற்கு முன்பு நடித்த அஞ்சான் படத்தைப்போலவே கத்தியிலும் விஜய்க்கு இணையாக அதிரடி நடனமாடி பெருவாரியான விஜய் ரசிகர்களை கவர்ந்தார். அதோடு அந்த படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகை அந்தஸ்தையும் பெற்றார் சமந்தா. ஆனால், கத்தி படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள லீலா பேலசில் பிரமாண்டமாக நடந்தபோது, செக்யூரிட்டி பலமாக இருந்ததால், உள்ளே செல்ல பாஸ் இல்லாமல் வந்த சமந்தாவை பத்து நிமிடத்துக்கு மேலாக காக்க வைத்து விட்டனர். அதையடுத்து பட யூனிட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அந்த அளவுக்கு சமந்தா படநாயகி என்று தெரிந்தும்கூட உள்ளே நுழைய விடாமல் வாசலில் கெடுபிடி செய்தனர். இந்த சம்பவம் சமந்தாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.