ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான பிரமாண்ட படமான பாகுபலி தற்போது தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியாவிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு வெளிநாடுகளிலும் இதுவரை இந்திய படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கிடையே பாகுபலி நாயகன் பிரபாஸ் உள்ளிட்ட டீம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த செய்தி வெளியான பிறகு அப்படத்திற்கு வடஇந்தியாவில் இன்னும் தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறதாம். அதனால் பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி அதிக உற்சாகத்தில் இருக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் 2ஆம் பாகத்திற்கு தேவையான 40 சதவிகித காட்சிகளை ஏற்கனவே படமாக்கி விட்ட அவர், அடுத்த 60 சதவிகித படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் தொடங்குகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டும் அவர், பிரமாண்டத்தையும் அதிகப்படுத்துகிறாராம். அது மட்டுமின்றி, இந்தி சினிமா நடிகர் நடிகைகளையும் அடுத்த பாகத்தில் நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கிறது. இந்தநிலையில், அடுத்த பாகத்தை எந்ததெந்த லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று வடஇந்தியாவில் விசிட் அடித்திருக்கும் ராஜமவுலி, இரண்டாம் பாகத்திற்கு மஹாபலி என்ற டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.