ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வைராக்கியம், அழகி, கஸ்தூரி, தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களில் மெயின் வில்லியாக நடித்தவர் நிஷா. இதில் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வரும் ப்ரியா கேரக்டர் டிவி நேயர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட திட்டுக்களை வாங்கிக்கொடுத்திருக்கிறதாம்.
இப்படி டிவி நேயர்கள் உங்களை திட்டுவது மனதை பாதிக்கிறதா? என்று நிஷாவைக்கேட்டால்,
ஆரம்பத்தில் இப்படி திட்டுகிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அது பழகி விட்டது. தொடர்ந்து நான் வில்லியாகவே நடிப்பதால் ஷாப்பிங் போகும் இடங்களில் என்னை பார்க்கும் பெண்கள் சகஜமாக பேச மாட்டார்கள். அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொள்வார்கள். பின்னர் தயக்கத்துடன்தான் பேசுவார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் சீரியலில் பேசுவது போன்று ரப் அண்ட் டப்பாக பேசாமல் மென்மையாக பேசுவதைப்பார்த்து அவர்களும் என்னிடம் சகஜமாக பேசுவார்கள். ஆனபோதும், எதற்காக சீரியல்களில் அவ்வளவு மோசமானவராக நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அப்போது அவர்களிடம், ஒரு கதை என்று வருகிறபோது வில்லி கேரக்டர் அப்படி இருந்தால்தான் கதையே நகரும். டைரக்டர்கள் எப்படி அதில் நடிக்க சொல்கிறார்களோ அப்படித்தான் நாங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்வேன். அதை சிலர் புரிந்து கொள்வார்கள்.
மேலும், சீரியலில் பேசப்படும் நடிகையாகி விட்ட எனக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது. என்று கூறும் நிஷா, விஷால் நடித்த பூஜை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். தொடர்ந்து சீரியல்களைப் போன்று சினிமாவிலும் என்னை வெளிச்சம் போட்டு காட்டும் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அதோடு, என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ், நெகடீவ் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எனக்கு ஸ்கோர் பண்ணுவதற்கு எந்த கேரக்டரில் வாய்ப்பு இருக்கிறதோ அதில் நடிப்பேன் என்கிறார் நிஷா.