ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் ஐஸ்க்ரீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தேஜஸ்வி. ஒரு படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்து ஆந்திராவை கலக்கியவர் இவர். தற்போது தமிழில் நட்பதிகாரம்-79 படத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் இவர் மட்டுமே நாயகி இல்லை. இன்னொரு நாயகியாக ரேஷ்மியும் நடித்திருக்கிறார்.
மேலும், தேஜஸ்வியே கதைப்படி முதன்மை நாயகி என்றபோதும், அவரை தனது நடிப்பினால் பின்தள்ளி விட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே போட்டி மனநிலையுடன்தான் இந்த படத்தில் நடித்தாராம் ரேஷ்மி. ஆனால் பாடல் காட்சிகளில் வெஸ்டர்ன் பாணியில் டிரஸ் அணிந்து நடிக்க வேண்டும் என்றபோது, என்னால் அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று நழுவினாராம் ரேஷ்மி.
அதேசமயம், தேஜஸ்வியோ, துக்கடா டிரஸ் அணிந்து நடிக்கக்கூட தயாராக இருந்தாராம். அதனால், ஏற்கனவே அவருக்கே கதையில் முக்கியத்துவம் இருந்தநிலையில், பின்னர் மேலும் அதிக காட்சிகளை கொடுத்து விட்டாராம் இயக்குனர் ரவிச்சந்திரன். அதனால், அதிக உற்சாகமான தேஜஸ்வி, கவர்ச்சி மட்டுமின்றி, பர்பாமென்ஸ் காட்சிகளிலும் ரேஷ்மியை விட பல காட்சிகளில் தூக்கலாக நடித்து தூள் கெளப்பி விட்டாராம்.