12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
தமிழ், தெலுங்கில் நேரடியாக தயாரிக்கப்பட்ட படம் பாகுபலி. 250 கோடியில் தயாரான இப்படம் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மொழிகளில் இந்தி, மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி படத்தை அடுத்து ஆங்கிலம், சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளாராம் ராஜமவுலி.
இதற்கு காரணம், தற்போதுவரை தென்னிந்தியாவில் வசூலித்துக்கொண்டிருக்கும் பாகுபலி படம் வெளிநாட்டினரையும் கவர்ந்து வருகிறதாம். அதற்கு வரும் விமர்சனங்கள் பாசிட்டீவாக இருப்பதினால்தான் மேலும் இந்த படத்தை இரண்டு மொழிகளில் டப் செய்து சுமார் 20 நாடுகளில் அடுத்தபடியாக வெளியிடப்போகிறாராம் ராஜமவுலி.
அதோடு, இந்த படத்திற்கான நேரம் இரண்டு மணி நேரம் 40 நிமிடம் வரை இருப்பதால், அதை 2 மணி நேரமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.