இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ப்ரணிதா. அதன்பிறகு அவர் கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது பரபரப்பாக பேசப்பட்டார். அதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளே அந்த சமயத்தில் ப்ரணிதாவை கண்டு பயந்தனர். ஆனால் அவர்கள் பயந்தது போன்று எதுவும் நடக்கவில்லை.
காரணம், சகுனி படம் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக ப்ரணிதாவுக்கு தமிழில் படமே இல்லை. அதனால் மறுபடியும அவர் தெலுங்கு, கன்னடம் என்று நடிக்க சென்று விட்டார். இந்த நிலையில், மாஸ் படத்தில் மறுபடியும் நடித்த ப்ரணிதா, அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்றபோதும் சூர்யா படம் என்பதால், இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே புதிய படங்களில் கமிட்டாகி விட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறங்கினார்.
ஆனால் யாருமே ப்ரணிதாவை கண்டுகொள்ளவில்லை. அதோடு வழக்கம்போல் அவர் தமிழில் மூன்றாவதாக நடித்த படமும் தோல்வியடைந்து விட்டது. விளைவு, இப்போது ப்ரணிதா ராசியில்லாத நடிகை என்று கோலிவுட் முத்திரை குத்தி விட்டது. அதனால் பெரிய எதிர்ப்பார்ப்போடு வந்த ப்ரணிதா, பெரிய ஏமாற்றத்துடன் மறுபடியும் வந்தவழியே திரும்பிச்சென்று விட்டார்.