'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
அதர்வாவைப் பொறுத்தவரை தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஜாலியாக பேசிப்பழகக்கூடியவர். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்தபோது அமலாபாலை கிண்டல் செய்வதையே வேலையாக வைத்திருந்தார். அதோடு விடவில்லை, அந்த படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது, முதல்நாள் ஷூட்டிங்கில் நான் அமலாபாலை கட்டிப்பிடித்தபோது அவர் ஒரு சவுண்டு விட்டார். அதைக்கேட்டு நான் பயந்து விட்டேன். நாம்தான் ஒன்றுமே செய்யவில்லையே பிறகு எதற்காக அவர் அப்படியொரு சத்தம் கொடுக்கிறார் என்று தடுமாறினேன். ஆனால், அதன்பிறகு நான் கட்டிப்பிடித்தபோதும் அதே சத்தம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. அப்போதுதான் இவர் கட்டிப்பிடித்தாலே இப்படியொரு சத்தத்தை வெளிப்படுத்துவார் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.
அதையடுத்து, சமீபத்தில் சண்டிவீரன் படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ளும்போது, இதுவரை என்னுடன் நடித்த எல்லா நடிகைகளுமே என்னைவிட சின்ன பெண்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆனந்தியுடன் நடித்தபோது அவரை ஒரு பச்சைக் குழந்தைபோல்தான் நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு ஒரு விசயத்தை சத்தமாககூட சொல்லமாட்டார். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது கிட்ட வரவே கூச்சப்படுவார். அவரைப்பார்த்தால் கோபமெல்லாம் வராது. பாவமாகத்தான் இருக்கும்.
இருப்பினும், சண்டிவீரன் படப்பிடிப்பு நடந்தபோது நேரம் போகவில்லை என்றால் அவரை கிண்டல் செய்வதுதான் எனது பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் அப்படி நான் கிண்டல் செய்யும்போது சில சமயங்களில் அவர் அழுதே விடுவார். அந்த அளவுக்கு குழந்தை மனசு ஆனந்திக்கு என்று சொல்லும் அதர்வா, அதனால் சில நேரங்களில் அவரை கிண்டலடித்தாலும் பின்னர் அதை நினைத்தே நானே பீல் பண்ணியிருக்கிறேன் என்கிறார்.